Posts

Showing posts from July, 2020

கீழடிக்கு ஓர் இணையடி எம் கொடுமணல் ¦ Kodumanal

Image
கொடுமணல் பழமையும் பெருமையும் கரைபுரண்டோடும் செழுமையும் பல்கிப் பெருகிய தமிழகத்தினில் புகழுக்கு ஓர் மணிமகுடமாய் நொய்யல் ஆற்றின் வடகரையில் மண்ணில் புதையுண்ட பண்டைய தமிழனின் வாழ்க்கைப் புதையல் - " கொடுமணல்"      ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ள கொடுமணல் கிராமம், இது நொய்யல் ஆற்றின்  வடகரையில் அமைந்துள்ள தொன்மை  வாய்ந்த தொழில் நகரம். சங்க காலம் என வழங்கப்படும் காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும் . கொடுமணல் சங்க நூலில் (பதிற்றுப்பத்து) " கொடுமணம் " என்று அழைக்கப்பட்டுள்ளது .    சான்று-1: (சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தில் புலவர் அரிசில் கிழார் என்பவரால் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை புகழ்ந்து பாடிய பாடல்) விளக்கம்      வேதங்களைச் சொல்லக் கேட்டு அதற்கான விரதங்களை இடைவிடாது கடைபிடித்து வேள்விகளைச் செய்து முடித்த மன்னனே! நுண்ணிய கருமணலைப் போன்ற கீழே தாழ்ந்த கரிய கூந்தலைக் கொண்ட திருமகளாகிய லட்சுமியிலும் சிறந்த உன் மனைவிக்கு கொடுமணம் என்னும் ஊரில் மிகுந்த வேலைப்பாடுகள் கொண...

Kandha Sasti kavasam lyrics | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

Image
கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள்  கந்தர்  சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட (2) மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக  நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!  சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடை...